1. Home
  2. தமிழ்நாடு

28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி..!

1

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விருத்திமான் ரகானே மற்றும் ருத்ராஜ் கெய்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ரகானே 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கெய்க்வாட் - டேரில் மிட்செல் ஒரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். இவர்களில் கெய்க்வாட் 32 ரன்களிலும், டேரில் மிட்செல் 30 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய துபே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் மொயீன் அலி 17 ரன்களிலும், சாண்ட்னர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணி கௌரமான நிலையை எட்ட உதவினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய தோனி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

CSK vs PK

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். 

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி வீரர்கள் பேர்ஸ்டோ 7 ரன்களிலும், ரோசோவ் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே ஒரே ஓவரில் வீழ்த்தினார். சிறிது நேரம் நிலைத்து நின்ற தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும், ஷாசாங்க் சிங் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

CSK vs PK

பின்னர் களமிறங்கிய சாம் கர்ரண் 7 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா ரன் எதுவுமின்றியும், அசுதோஷ் சர்மா 3 ரன்களிலும், ஹர்ஷல் படேல் 12 ரன்களிலும் சென்னை அணியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும், வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.

Trending News

Latest News

You May Like