1. Home
  2. தமிழ்நாடு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !


பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸில் வென்றது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம், சொதப்பல் என பல்வேறு காரணங்கள் காரணமாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் பறிகொடுத்தது.

13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் இன்று பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி, கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இதனால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like