ரசிகர்களை மைதானத்திலேயே காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/737e26424ec7cddd3664ed582e1a7c0c.jpg?width=836&height=470&resizemode=4)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி முடிந்ததும் ரசிகர்களை மைதானத்திலேயே காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் இந்த வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இன்றை போட்டி முடிந்ததும் தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.