நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/3ae8878daa763a4a0d8f87cae48fd135.jpeg?width=836&height=470&resizemode=4)
செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மற்றும் எம்.பி ஆ.ராசா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் சனாதன தர்மம் விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ.ராஜா எம்பி ஆகியோர் மீதான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.