1. Home
  2. தமிழ்நாடு

சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் நேரம் மாற்றம்..!

1

வாரந்தோறும் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலானது, மாலை 4.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த நிலையில், வருகிற மே 25, 27 ஜூன் 1, 3, 8, 10, 15 மற்றும் 17 ஆகிய தினங்களில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இவ்வாறு புறப்படும் இந்த சிறப்பு விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.

இதன்படி, இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில், நாகப்பட்டினம் 7.30, திருவாரூர் 8.40, பேராளம் 9.13, மயிலாடுதுறை 9.38, வைத்தீஸ்வரன்கோவில் 9.57, சீர்காழி 10.07,

சிதம்பரம் 10.23 கடலூர் துறைமுகம் 10.55, திருப்பாதிரிபுலியூர் 11.04, பண்ருட்டி 11.23, விழுப்புரம் 12.25, மேல்மருவத்தூர் 1.28, செங்கல்பட்டு 2.03, தாம்பரம் 2.33 என சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 3.20 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like