மாநகராட்சி அறிவிப்பு : சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்கா?இந்த நம்பருக்கு அழையுங்க..!

சென்னையில் கடந்த வருடம் இதே நாளில் 8,263 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த வருடம் 5 ,408 மில்லியன் கன அடி நீர் குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு வருமோ என்று மக்கள் பயப்படுகிறார்கள்.இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் பிரச்சனை என்று கூறினார். மேலும் சென்னைக்கு 13.22 டிஎம்சி குடிநீர் கொள்ளளவு தேவை. ஆனால் தற்போது 15.560 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு இருப்பு உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் குடிநீர் பிரச்சனை மற்றும் தட்டுபாடு இருக்காது என்று கூறினார்.மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,040 எம்.எல்.டி. அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேலை ஏதேனும் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம் அல்லது மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்களுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை கொண்டு உள்ளது.மேலும் இந்த செயலில் சாலை, குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்ற, மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த குறைபாடுகளை குறுந்தகவல்கள் மூலமாகவோ புகைப்படம் எடுத்தோ இச்செயலியில் பதிவு செய்தால் அக்குறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளால் எடுக்கப்படும்.