1. Home
  2. தமிழ்நாடு

மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு - 2 பேர் பலி!

மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு - 2 பேர் பலி!


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து கம்பெனியில் ரசாயன வாயு கசிந்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.

பரவாடா பகுதியில் உள்ள மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீரென ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டதால்  தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் சிலர் ரசாயன வாயுவை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர். இதில் 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயுக்கசிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் 30 பேர் வரை பணியில் இருந்ததாக தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பெனி மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து பரவாடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

newstm.in

Trending News

Latest News

You May Like