தியேட்டரில் பின்பக்க சுவர் ஏறி குதித்த விஜய் ரசிகரின் நிலையை பாருங்க..!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள 4 திரையரங்குகளில் லியோ திரைப்படம் இன்று வெளியானது.
திரைப்படத்தை காண காலை முதலே ரசிகர்கள் திரை அரங்கிற்கு வெளியே காத்திருந்தனர். லியோ திரைப்படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் டிக்கெட் வாங்கி முந்தி அடித்து திரையரங்கிற்குள் சென்றனர். அப்போது, கிருஷ்ணகிரி பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்த அன்பரசு என்பவர் லியோ திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் காலை முதலே திரையரங்கிற்குள் அனுமதிமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் திரையரங்கிற்கு உள்ளே செல்ல ஊழியர்கள் அனுமதிக்காததால், திரையரங்கின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்ற போது தவறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட காவல்துறையினர் அறிவுரை கூறி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.