1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு இல்லை - ஷாக் கொடுத்த சந்திரபாபு நாயுடு ..!

1

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக தனிபெரும்பான்மை பெறாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது. குறிப்பாக பாஜக ஆட்சி அமைக்க சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் இன்று விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது பேசிய அவர், தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தன் வாழ்நாளில் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை கண்டதில்லை என்றும் சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியுடன் கூறினார்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் தங்களுக்கு அதிகமாக அளித்துள்ளனர் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆந்திர மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று கூறிய சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

என்டிஏ கூட்டணியின் ஒரு அங்கமாக இந்த வெற்றியை தாங்கள் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட்டதாலயே இந்த வெற்றி கிடைத்ததாகவும் கூறினார். மேலும் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாகவும் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறிய சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்ற தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடும் நிபந்ததனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.அதன்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரும் நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகளையும் இரண்டு கட்சிகளும் கோருவதாக தவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like