தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவன வேலை : ரூ.65,000 வரை சம்பளம்..!
பணியின் விவரங்கள்
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| ஃபிட்டர் | 176 |
| வெல்டர் | 97 |
| டர்னர் | 51 |
| மெக்கானிஸ்ட் | 104 |
| எலெக்ட்ரிஷியன் | 65 |
| எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் | 18 |
| ஃபவுண்டரிமேன் | 4 |
| மொத்தம் | 515 |
இப்பணியிடங்கள் நிரப்பப்படும் 11 ஆலைகளில் தமிழ்நாட்டில் 2 ஆலைகள் உள்ளன. ராணிப்பேட்டை மற்றும் திருச்சியில் பணி வாய்ப்பு உள்ளது.
- Boiler Auxiliaries Plant (BAP), ராணிப்பேட்டை
- High Pressure Boiler Plant (HPBP), திருச்சி
கைவினைஞர் பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, பொது பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவிற்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 30 வயது வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம்.
இதில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடஙக்ள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு உள்ளது.
- ஃபிட்டர், வெல்டர், டர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற்ரு, தேசிய வர்த்தக சான்றிதழ் (ITI) மற்றும் தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டிலும் சேர்த்து பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவினர் 60% மதிப்பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் முதல் 1 வருடத்திற்கு தற்காலிக ஊழியர்களாக பணி அமர்த்தப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதல் கட்டமாக கணினி வழியில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இரண்டாம் கட்டமாக நடைபெறும். கணினி வழி தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றை பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.bhel.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,072 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.472 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம் ஜூலை 16 முதல் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 12.08.2025 |
| கணினி வழி எழுத்துத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும். |
மத்திய அரசு நிறுவனத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் முறையான ஆவணங்களுடன் ஆன்லைனில் வீட்டில் இருந்தப்படியே விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு தேதி மற்றும் அதற்கான அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.