மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை ..!

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களை பாதுகாக்கும வகையில் செய்ய வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருந்து, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதுடன், கூடாரம், வாகனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.