1. Home
  2. தமிழ்நாடு

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த தணிக்கைத்துறை அதிகாரி..!

Q

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ஜிதின் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 27. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டின் மாடியில் கஞ்சா சாகுபடி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் படி, போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கஞ்சா செடி பயிர் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கஞ்சா செடி பயிர் செய்ததை ஜிதின் ஒப்புக்கொண்டார். அவர் அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜிதின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். ஜிதின் 4 மாதங்களாக 5 கஞ்சா செடிகளை வளர்ந்து வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது.

Trending News

Latest News

You May Like