செல்போன் வெடித்து சிதறியது : சர்வீஸ் செய்யும் போதே வெடித்துச் சிதறிய செல்போன்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b190b8e0c4cb33d8f6b997360f37104e.png?width=836&height=470&resizemode=4)
தாராபுரத்தில் செல்போன் கடையை நடத்தி வருபவர் சபரிகிரி. இவரது கடைக்கு கடந்த பிப்.3 ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் செல்போன் சர்வீஸ் செய்வதற்குக் வந்துள்ளார்.
இந்நிலையில் ரிப்பேரான செல்போனை செல்போன் கடையில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ஷ்டவசமாக கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் உயிர் தப்பினர்.மேலும், செல்போனிலிருந்து திடீரென கரும்புகைகள் கடை முழுவதும் கிளம்பியதால், அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகின்றன.