1. Home
  2. தமிழ்நாடு

ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை...உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து தற்போது விழுப்புரம்..!

1

நீலகிரியில், திருப்பூர், ஈரோட்டில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் ஸ்ட்ராங் ரூம் சி.சி.டி.வி. கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.  விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் சி.சி.டி.வி. கேமராக்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.

நேற்று காலை 9:28 முதல் 9:48 மணி வரை சி.சி.டி.வி. ஆப் ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. 

Trending News

Latest News

You May Like