1. Home
  2. தமிழ்நாடு

சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு : இனி தேர்வில் கால்குலேட்டர் உபயோகிக்கலாம்..!

1

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் முறைகள், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு முறையில் மாற்றங்கள் கொண்டுவரும் பொருட்டு பல்வேறு கட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. அதில் முக்கிய மாற்றமாக 12-ம் வகுப்பு கணக்கியலில் தேர்வில் மாணவர்கள் எளிமையான கால்குலேட்டர் உபயோகிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் மற்றும் சதவீதம் கணக்கிடும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளனர். எந்த வகையான மாடல்கள் அனுமதிக்கப்படும் என்பது குறித்த பட்டியல் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

முக்கிய மாற்றமாக தேர்வு விடைத்தாளை கைப்பட திருத்தம் செய்வதை, டிஜிட்டல் முறைக்கு (On-Screen Marking) மாற்றப்படுகிறது. அதாவது, மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு மதிப்பீட்டிற்கு டிஜிட்டல் வடிவில் அனுப்பப்படும். இதன் மூலம் வேகமாகவும், மேம்பட்ட முறையிலும் விடைத்தாள் திருத்தம் நடைபெறும் என கூறப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் இந்த நடைமுறையை அமல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள துணை தேர்வுகளுக்கும் இந்த முறையில் விடைத்தாள் மதிப்பீடு செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் மறுமதிப்பீட்டிற்கும் (Re-evaluation) விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த முறையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

திறன் சார்ந்த தொழில்சார் பாடங்களின் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி, சிறந்த தனியார் ஏஜென்சிகளின் மூலம் மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.

10-ம் வகுப்பிற்கு 2026-27 கல்வி ஆண்டில் இரண்டு கட்ட பாட முறையை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் Standard மற்றும் Advanced Level கொண்டுவரப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பியதை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பிற்கு 2026-ம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் மாணவர்கள் எதில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனரோ அவை பொதுத்தேர்வு மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்கான உத்தேச தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like