1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

1

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது காணொளி காட்சி மூலமாக நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில், தமிழ்நாடு தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மே மாதத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 3.8 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளனர் என்றும், எனவே இதில் மே மாதம் பாக்கி உள்ள 6.2 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும் ஜூன் மாதம் தர வேண்டிய 9.17 டிஎம்சி நீரை தவறாமல், கால தாமதம் இன்றி உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டது.

இதேபோல், கர்நாடக அரசு முன் வைத்த வாதத்தில், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட முடியாது என கர்நாடக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா, “மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட பரிந்துரை செய்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது குட்டம் வருகின்ற 21 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , அந்த கூட்டத்தில், “காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த இந்த முடிவின் மீது ஆலோசனை நடத்தப்படும் என்றும், அந்த ஆலோசனைக்கு பிறகு, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று பரவிய தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை” என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் தெரிவிக்கப்படுகிறது. பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like