1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் ஆர்யா மீதான வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் ஆர்யா மீதான வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


சிங்கம்பட்டி ஜமீனை இழிவுப்படுத்தியதாக நடிகர் ஆர்யா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். ஆர்யா,விஷால், ஜனனி ஐயர், அம்பிகா உள்ளிட்டோர் அதில் நடித்திருந்தனர். அவன் இவன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். இப்படத்தில் ஜமீன் தொடர்பான காட்சிகளும் இடம்பெற்று இருக்கும்.

இந்நிலையில் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நடிகர் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. நெல்லை அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 28ஆம் தேதி நடிகர் ஆர்யா நேரில் ஆஜராக உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like