1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் இலவச கணினி மையம், தையல் பயிற்சி மையம் : வெளியான தேமுதிக தேர்தல் அறிக்கை..!

1

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான 46 வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். 

சிறப்பு அம்சங்கள்: 

  • தென்மாவட்ட மக்கள் பயன்பெற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கப்பட்ட காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை
  • நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (MPLADS) தொகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களுக்கான புதிய சமையல் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கி புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.
  • அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படும் மல்லிகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • விருதுநகரில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்ய மத்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்படும்.
  • விருதுநகரில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரி (NIFT) துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகள் நான்கு வழிச்சாலை ஆக்கப்படும்.
  • விபத்தில்லா சிவகாசி என்ற திட்டத்தின் கீழ் பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கடன் கிடைக்க அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படும்.
  • விருதுநகர் மக்களவை தொகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு மத்திய அரசின் திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
  • காய்கறிகள், பூக்கள், தானியங்கள் ஆகியவை பாதுகாக்க 100 டன் அளவிலான குளிர்ப்பதன கிடங்குகள் 50% மானியத்துடன் அதிகளவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேசிய அளவிலான போட்டி தேர்வில் நமது மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வண்ணம் என் சொந்த முயற்சியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
  • “MY CAPTAIN” என்ற செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்கள் குறைகள் கூறவும், மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் அறியவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கேப்டன் இலவச கணினி மையம், தையல் பயிற்சி மையம் அமைத்து பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவேன்

Trending News

Latest News

You May Like