1. Home
  2. தமிழ்நாடு

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. எதுல தெரியுமா ? பிஸ்கெட் பாக்கெட்டிற்குள்..!!

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. எதுல தெரியுமா ? பிஸ்கெட் பாக்கெட்டிற்குள்..!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மத்திய சிறைச்சாலை காலாப்பட்டில் உள்ளது.இங்கு 350-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் உள்ளனர்

இந்தநிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அஜித் என்பவரை அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோர் சந்திக்க சென்றனர். அவரை சிறையில் சந்திப்பதற்காக முன் அனுமதி பெற்று சென்றுள்ளனர் அப்போது கைதி அஜித்துக்கு அவர்கள் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர்.

சந்தேகமடைந்த சிறைச்சாலை வார்டன், பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பிஸ்கட்டுகளுக்கு நடுவில் சிறிய சிறிய கஞ்சா பாலீத்தீன் பைகளில் மடித்துவைத்து இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவர் சேர்ந்து சிறையில் வைத்தே கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like