சென்னையில் 4 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ?

சென்னையில் உள்ள வார்டுகளில் 59, 122, 146, 164 ஆகிய வார்டு கவுன்சிலர்கள் வேவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வார்டுகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த இடைத் தேர்தலுக்காக சென்னையில் 98 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 1.02 லட்சம் பேர் வாக்கு செலுத்த உள்ளனர். இந்த இடைத் தேர்தலில் தேர்வு செய்யப்படும் நபர்கள் வரும் 2027-ஆம் ஆண்டு வரை கவுன்சிலராக பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.