1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 10-ல் இடைத்தேர்தல்..!

1

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூன் 21ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி பெயரும் இடம்பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 14ஆம் தேதி வேட்புமணு தாக்கல் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி இறந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Trending News

Latest News

You May Like