1. Home
  2. தமிழ்நாடு

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல்?


வால்பாறை சட்டசபை உறுப்பினராக இருந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலகட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனா்.

அமுல் கந்தசாமி மறைவை தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானது. எனவே அந்த தொகுதிக்கு சட்டசபை தேர்தல் (இடைத்தேர்தல்) எப்போது நடத்தப்படும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக வால்பாறை தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்.

அ.தி.மு.க.வின் வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.கே. அமுல்கந்தசாமி நேற்று காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை தொகுதி காலியாகியிருப்பதால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்த கேள்வி அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தமிழக சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ளதால், வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ஒரு தொகுதி எம்எல்ஏ காலமானால், அந்த தொகுதி 6 மாதங்களில் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், பொதுத் தேர்தல் ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் வருவதாக இருந்தால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதே நடைமுறையாகும்.

Trending News

Latest News

You May Like