1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!!


வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like