ஆனா இது புதுசா இருக்கு னே... புதுசா இருக்கு : பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/7fdc01a8295fddc207db3a3b2c51ea0a.jpg?width=836&height=470&resizemode=4)
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அவர்களின் கணவர் பூமிநாதன் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மயான பராமரிப்பு பணிகளுக்காக இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டியுள்ளார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் எடையூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் வெட்டிய குற்றத்திற்காக 427 பிரிவின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கையை திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் பாரம்பரிய மரமான பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முறையில் பல்வேறு கோணங்களில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், ஓரிரு பகுதிகளில் செங்கல் சூளைக்காக பனைமரம் வெட்டி வீழ்த்தப்படுகிறது.ஆகையால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழர்களின் பாரம்பரிய மரமான பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.