1. Home
  2. தமிழ்நாடு

மகள்களான 3 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்.. விசாரணையில் அதிர்ச்சி !

மகள்களான 3 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்.. விசாரணையில் அதிர்ச்சி !


கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேட்டுக்கடை பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளுடன் பெண் ஒருவர் வாடகை வீட்டில் குடியேறினார். இந்நிலையில் அந்த வீட்டிற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்துசென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை கண்காணித்து வந்த நிலையில் வீட்டிற்குள் திடீரென புகுந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த 2 தனி அறைகளில் பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. அப்பெண் தனது மூன்று பிள்ளைகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளியானது.

வீட்டில் இருந்த லதா என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது மூத்த மகளான கல்லூரி மாணவி மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் தனது பிள்ளைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. தனது கடைசி மகளின் தோழியான சிறுமி ஒருவரையும் ஆசைக்காட்டி பாலியல் தொழிலில் அவர் ஈடுபடுத்தியுள்ளார்.

வீட்டின் நடந்த சோதனையின் போது சிறுமிகளோடு உல்லாசமாக இருந்த இருவர் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலையைச் சேர்ந்த தொழிலாளி சுனில் என்பதும் தெரியவந்தது.

மகள்களான 3 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்.. விசாரணையில் அதிர்ச்சி !

கல்லூரி மாணவி உள்பட 4 சிறுமிகளையும் போலீஸார் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இவர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பெண் பிள்ளைகளின் தாயார் லதா மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். கல்லூரி, பள்ளி செல்லும் தனது மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகள்களான 3 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்.. விசாரணையில் அதிர்ச்சி !

newstm.in

Trending News

Latest News

You May Like