பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/03c3d1533f172484eb17c1399cb3d636.jpg?width=836&height=470&resizemode=4)
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த 02-ம் தேதி பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்தார்.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்ட் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது. 650 எம்.பி.க்கள் பதவி காலியானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.