திருமணத்தில் விருப்பம் இல்லைனு கூறியதால் வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c612ddb72eaa621074d975363ba02831.webp?width=836&height=470&resizemode=4)
கர்நாடக பைச்சவள்ளி கிராமத்தில் வசிப்பவர் மல்லப்பா. இவரது மகள் தீபா, 21. இவருக்கும், உறவு முறையில் தாய்மாமனான மால்தேஷ், 35, என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 22ம் தேதி, திருமணம் நடக்க இருந்தது. ஆனால், மால்தேஷை திருமணம் செய்வதில், தீபாவுக்கு விருப்பம் இல்லாமல் போனது. இது குறித்து மால்தேஷிடம், தீபா கூறி உள்ளார். ஆனால், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று, மால்தேஷ் மிரட்டி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், தீபா துாக்கில் சடலமாக தொங்கினார். தற்கொலை செய்ததாக, குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், தீபா விஷம் குடித்தது தெரிந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் மால்தேஷை பிடித்து, போலீசார் விசாரித்தனர். தீபா வாயில் விஷம் ஊற்றி கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கூறியதால் ஒப்புக்கொண்டேன். திருமணம் செய்தாலும், உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன் என மால்தேஷிடம் தீபா கூறி உள்ளார். இதனால் கோபத்தில் தீர்த்துக் கட்டியதாக மால்தேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.