1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சந்தன பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது..!

1

 கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

அதன் பிறகு விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் என ஆயிரக்கானோர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று அதிகாலை அவரது உடல் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை முதல் சென்னை தீவுத்திடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலிலிருந்து புறப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த்தின் உடல் கண்ணீர் மல்க மிதந்த வந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதியாக அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.கேப்டன் விஜய்காந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், குடும்பத்தார்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி , இறுதி சடங்குகளை செய்தனர்.  அதன் பிறகு “புரட்சி கலைஞர்” கேப்டன் விஜயகாந்த் என எழுதப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்ட கேப்டனின் உடல் தேமுதிக தலைமை கட்டட அலுவலகத்தில் புதைக்கபட்டப்பட்டது.

Trending News

Latest News

You May Like