1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: ஆளுநரிடம் 3 பக்க கோரிக்கை மனு அளித்த விஜய்?

Q

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் அரசியல் பின்னணி குறித்து விசாரிக்க விஜய் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதுதவிர, ஆளுநரிடம் வேறு சில முக்கிய விவகாரங்கள் குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும், 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை விஜய் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபென்ஜால் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்தோம்.

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like