1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பழம்பெரும் பாடகி பிரபா அத்ரே காலமானார்..!

1

பழம்பெரும் பாடகி பிரபா அத்ரே இன்று காலை காலமானார். அவர் வயது  92..மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் புனேவில் உள்ள தினாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். மும்பையில் அவருக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற கிரானா கரானா இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார்.பிரபா ஆத்ரே, இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்று பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார்.இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது  2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.1990-ல் பத்மஸ்ரீ விருதும் 2002-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் 

Trending News

Latest News

You May Like