#BREAKING : காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அதிபர் டிரம்ப்..!

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும் மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், ''தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளவும், பலம், ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த ஆக்கிரமிப்பு பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கலாம். மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்டுவதற்கு அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இது தொடர்பாக கருத்து கூறியுள்ள டிரம்ப், ''விவாதிக்கப்படாவிட்டாலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். கூடுதலாக, "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு" காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். மோதலை நிறுத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைக்கு கடவுள் ஆசிர்வதிப்பாராக'' என்று தெரிவித்துள்ளார்.