#BREAKING : காஞ்சிபுரத்தில் பதற்றம்..! பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை..!

காஞ்சிபுரம், மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற வசூல்ராஜா.இவர் மீது, நான்கு கொலை வழக்குகள், 17 குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜா மீது மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட குழு நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர். ரவுடி வசூல்ராஜா மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்னர். வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.