#BREAKING : டாஸ்மாக் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது" அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று (மார்ச்.20) சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது.
இதன்போது டாஸ்மாக் முறைகேடு புகாரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25 வரை அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.