#BREAKING : செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/bc13bfd586abdf47dc33893c536b9b76.jpg?width=836&height=470&resizemode=4)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் கைது செய்தனர். அவருக்கு இதுவரையிலும் ஜாமீன் கிடைக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக அவரது தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம்