1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!

Q

சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

விளையாட வெளியில் சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது குழந்தை ஹாசினி விளையாடி விட்டு அபார்ட்மெண்ட்டுக்குள் வருவது பதிவாகி இருந்தது. ஆனால், உள்ளே வந்தவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞர் இரவு 9 மணியளவில் கையில் ஒரு பையுடன் வெளியே சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்பியது தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்திரவு கொடுத்து கொலை செய்த விஷயம் தெரிய வந்தது.

ஜாமினில் தஷ்வந்த் வெளிவந்த நிலையில், தன் தாயையும் கொன்று, வீட்டிலிருந்த நகை பணத்துடன், தலை மறைவானார்.

தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில், தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்தை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனக்ைகு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like