#BREAKING : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/df9645abc06b5bb9857b1a72e02d7933.jpg?width=836&height=470&resizemode=4)
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது அனைவரும் அறிந்ததே. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
கோடை மழையின் பெய்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் வரை பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு பள்ளிகளை திறப்பது சரியான முடிவாக தெரியவில்லை என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்து வந்தனர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது