#BREAKING : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4c723bb1827c71a7609ff483e878ade1.jpeg?width=836&height=470&resizemode=4)
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பாசிட்டிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்த அனுமதியளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயரும்.