1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சோகம்..!! பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு!

Q

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல இன்று (ஏப்ரல் 29) காலை பள்ளி செயல்பட்ட நிலையில், அங்கு பயின்று வரும் 3 வயது குழந்தை ஆரூத்ரா பள்ளியின் பின்புறம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த 12 அடி ஆழமுள்ள மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய குழந்தையைக் கண்ட பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு மதுரை மாநகர தெற்கு ஆணையர் தலைமையில் தல்லாக்குளம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் உரிமையாளர் திவ்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like