1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ரஷ்யாவின் முயற்சி தோல்வி..! நிலவில் "லூனா-25" விழுந்து நொறுங்கியது..!

1

இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது.

இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது.

கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது.

இந்த நிலையில், லூனா-25 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கிவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதைய பாதையிலேயே லூனா-25 விண்கலம் சுற்றி வருகிறது. அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆக.10ல் அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் திடீரென்று ஏற்பட்ட கோளாறால், நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் நிலவிய நிலையில், தற்போது விழுந்து நொறுங்கியுள்ளது. ரஷ்ய விண்கலம் விழுந்து நொறுங்கியதால் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. 

Trending News

Latest News

You May Like