#BREAKING : RCB அணிக்கு புது கேப்டன்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மொத்தம் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. விராட் கோலிக்கு 21 கோடியும், ராஜத் படிதருக்கு 11 கோடியும், யாஷ் தயாளுக்கு 5 கோடியும் கொடுத்துள்ளனர்.
பாப் டூ பிளஸியை ஆர்சிபி அணி விடுவித்துவிட்டதால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
மேலும் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஐபிஎல் 18ஆவது சீசனில் ஆர்சிபி அணி யாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், ‘‘என்னைக் கேட்டால் ராஜத் படிதரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன்.
சிஎஸ்கேவை பாருங்கள், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவியை கொடுத்திருப்பதால், அடுத்த 5 வருடங்களுக்கு அவர்களுக்கு கேப்டன்ஸி பிரச்சினை கிடையாது. ஆர்சிபியும் இதேபோல் செய்ய வேண்டும். இளம் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும். ராஜத் படிதர், இந்திய அணியில் பெரிய ஸ்டார் வீரராக வரவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரிடம் கேப்டன்ஸி திறமை இருக்கிறது. மேலும், ஐபிஎலிலும் நல்ல முறையில்தான் பேட்டிங் செய்கிறார்.இதனால், கே.எல்.ராகுலை வாங்கினாலும், படிதருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
31 வயதாகும் ராஜத் படிதர், இந்திய டெஸ்ட் அணிக்காக 3 போட்டிகளிலும், ஒருநாள் அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடி இருக்கிறார். இந்திய டி20 அணியில் இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்நிலையில் IPL-2025 சீசனுக்கான RCB அணியின் கேப்டனாக ரஜத் படிதர்(31) நியமிக்கப்பட்டுள்ளார்.