#BREAKING : ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்..!
மத்திய வருவாய் துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, டிசம்பர் 11 புதிய ஆளுநராக பதவியேற்கும் சசய் மல்ஹோத்ரா, 3 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார்.
இந்த நியமன உத்தரவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உடனடியாக ஒப்புதல் பெறவிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.