#BREAKING : பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு..!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பள்ளிக் கல்வித்துறை (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.
1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப். 18-ல் தொடங்கி 26-ம் தேதி நடைபெற இருப்பதாகவும், 27-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிச. 15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்களே, ரெடியா!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 29, 2025
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத்… pic.twitter.com/9D0uV89OGk