#BREAKING : புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது..!

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ்.
ஜூனியர் ஆர்டிஸ்ட் பெண் நடிகை ஆண் ஒருவருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் மனமுடைந்த நடிகை நவம்பர் 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் ஜெகதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக போலீஸாரை தேடி வந்தார். இறுதியாக இன்று பஞ்சகுட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
புஷ்பா 2 படத்திலும் ஜெகதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அவரது கைது படப்பிடிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.