#BREAKING: மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9c402c1c048e890e0b15272d9a58c00b.jpeg?width=836&height=470&resizemode=4)
லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஆறு மாதம் வரை இவர்கள் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிகாக இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.