#BREAKING : 4வது சுற்றில் பிரதமர் மோடி முன்னிலை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f34fd31903de9dd1a7e1cdb0accf5ed9.png?width=836&height=470&resizemode=4)
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களமிறக்கப்பட்டார். பிரதமர் மோடி கடந்த முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்கில் மோடி முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த சுற்றில் பிரதமர் மோடி திடீர் பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் 4வது சுற்றில் பிரதமர் மோடி முன்னிலை வந்துள்ளார்.
3 சுற்றில் பின்னடைவு சந்தித்த வேலையில் தற்போது 4வது சுற்றில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளதால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.பிரதமர் மோடி 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்