#BREAKING : பிரதமரால் 11 மீனவர்கள் விடுதலை..!

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 11 பேரை முதற்கட்டமாக விடுதலை செய்தது இலங்கை அரசு.
பிரதமர் மோடி இன்று (ஏப்.04) மாலை அரசு முறை பயணமாக இலங்கை செல்லவுள்ளார். மேலும் அந்நாட்டு பிரதமருடன் கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் விடுவிப்பு குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மேலும், அவர்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.