1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை : செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு..!

1

தமிழகத்தின் முக்கிய மலைப்பகுதி சுற்றுலா தலங்களான ஊட்டி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்) போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு செல்வது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதிகப்படியான மக்கள் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோரக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்தது.

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

epass.tnega.org இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்யலாம்

Trending News

Latest News

You May Like