#BREAKING:- இனி கோவில்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி !!
கொரோனா 2ஆவது அலை பரவ தொடங்கியுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கோயில் இரவு 8 மணிவரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டுதலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.