#BREAKING : செம அறிவிப்பு..! இனி வெறும் 200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை..!

வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுவது போல, 100 Mbps வேகத்தில் மாதம் ₹200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார். தியாகராஜன் தெரிவித்துள்ளாவது,
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் இண்டெர்நெட் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் கல்பி, வேலைவாய்ப்பு என பல்வேறு தேவைகளுக்கும் இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இணைய பயன்பாட்டிற்கான மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகமாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஃபைபர் இணைய வசதியும் மாதத்திற்கு ஆயிரங்களில் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் வாழ்க்கையில் இணைய தேவை அவசியமாகிவிட்டதை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டது போல, குறைந்த கட்டணத்தில் இணைய வசதியை கேபிள்கள் வழியாக ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். 100 Mbps வேகத்தில் மாதம் 5.200 கட்டணத்தில் இந்த சேவையை மக்களுக்கு கொண்டு வர உள்ளனர்.
மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால், மக்களுக்கு எளிதாக இணைய சேவை கிடைப்பது மட்டுமல்லாமல், பணமும் மிச்சப்படுத்த முடியும்.