#BREAKING : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை - NIA நீதிமன்றம் தீர்ப்பு..!
நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,சுவாமி அம்ருதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம், விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி இன்று (ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ''மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை'' என நீதிபதி தெரிவித்துள்ளார்.